ATM சார்ந்த திருட்டுக்களும் பாதுகாப்பு முறைகளும்.
அண்மைக்காலமாக ATM மூலம் பணம் திருடப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கின்றோம். ATM என்ற சொல் 'தன்னியக்கக் கூற்றுப் பொறி' (Automated Teller Machine) என்பதைக் குறிக்கும். இது, 1969இல் உருவாக்கப்பட்ட ஒரு இலகு வழி பணப் பரிமாற்ற முறையாகும். வங்கிகளுக்கு பதிலாக ATM மூலம் பண கொடுப்பனவு மற்றும் எடுப்பனவுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இருக்கும் என்ற நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. இன்று, உலகம் பூராகவும் இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
